அறம் செய்ய விரும்பு
அறம் செய் என்று கட்டளை இடாமல் நம் பெரியோர்கள் அறம் செய்ய விரும்பு என்று ஏன் சொன்னார்கள்?
மாணவர்கள் அளித்த விடை ஒரு அறத்தை செய்ய வேண்டும் என்று விரும்பினால்தான் அந்த அறத்தை செயல் படுத்த முடியும்.
மாணவர்களிடம் கேட்ட கேள்வி: நீங்கள் என்னென்ன அறங்களை செய்ய விரும்புகிறீர்கள்? எளிதாக செய்யக்கூடிய அறங்களை பகிருங்கள்.
மாணவர்களின் சில பதில்கள்:
1. பழைய பாட புத்தகங்களை தேவைபடும் மாணவர்களுக்கு அளித்தல்
2. தேவைப்படும்போது உணவை சக மாணவருடன் பகிர்தல்
3. கஷடப்படுபவருக்கு உதவுதல்
4. சக மாணவருக்கு தனக்கு தெரிந்த பாடத்தை சொல்லி தருதல்
5. மரம் வளர்ப்பது
அடுத்த இதயகல்வி வகுப்பில் என்னென்ன அறங்களை செய்ய முடிந்தது என பகிர இயலுமா? என்று மாணவர்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் திட்டத்தை அளித்தோம்.
அடுத்த் இதயகல்வி வகுப்பில் மாணவர்கள் பகிர்ந்தவை:
1. அம்மாவிற்கு தொல்லை கொடுக்காமல் இருந்தேன்.
2. வீட்டு அருகில் வசிக்கும் முதியவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தேன்.
3. கண் தெரியாதவருக்கு சாலை மாறிச் செல்ல உதவினேன்.
4. கட்டிட வேலை செய்யும் சித்தாள் குழந்தைக்கு பால் கொடுத்தேன்.
No comments:
Post a Comment